பிஎஸ்என்எல் நிறுவனம் செல்போனில் இருந்து நேரடியாக செயற்கைக்கோள் இணைப்பு சேவையை வழங்கும் Direct-to-Device Satellite வசதியை தொடங்கியது
Photo Credit: BSNL
இந்தச் சேவை கூடுதல் இணைப்பாக வழங்கப்படுமா அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் இணைக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை
பிஎஸ்என்எல் நிறுவனம் செல்போனில் இருந்து நேரடியாக செயற்கைக்கோள் இணைப்பு சேவையை வழங்கும் Direct-to-Device Satellite வசதியை தொடங்கியது. இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) இதனை அறிவித்துள்ளது. இது இந்தியாவின் முதல் Direct-to-Device Satellite சேவை என்று அழைக்கப்பட்டது. கலிபோர்னியாவைச் சேர்ந்த தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான Viasat உடன் இணைந்து இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இது நாட்டின் தொலைதூர மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மூலைகளிலும் கூட பயனர்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. BSNL முதன்முதலில் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 விழாவில் இந்த சேவையை வெளியிட்டது. இப்போது அதன் திறனை சோதிக்கத் தொடங்கியுள்ளது.
இது செயற்கைக்கோள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை இணைப்பதன் மூலம் தடையற்ற இணைப்பை வழங்குகிறது. வழக்கமான நெட்வொர்க்குகள் அடிக்கடி தோல்வியடையும் அல்லது கிடைக்காத தொலைதூர அல்லது பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிஎஸ்என்எல் கூறுகிறது.
செயற்கைக்கோள் இணைப்பு என்பது ஒரு புதிய தொழில்நுட்பம் அல்ல. ஏற்கனவே ஆப்பிள் முதலில் iPhone 14 சீரியஸ் ஸ்மார்ட்போன்களுடன் இந்த டெக்னாலஜியை அறிவித்தது. இருப்பினும், இந்தியாவில் உள்ள வழக்கமான பயனர்களுக்கு செயற்கைக்கோள் தகவல்தொடர்பு கிடைக்கவில்லை. இதுவரை அவசர சேவைகள், இராணுவம் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Direct-to-Device மூலம், BSNL அதன் அனைத்து பயனர்களுக்கும் சேவையை வழங்குகிறது. தொலைதூர இருப்பிடம் இருந்தபோதிலும் தொடர்ந்து இணைந்திருக்கும் திறனை அவர்களுக்கு வழங்குகிறது. உதாரணமாக, ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள சந்திரதல் ஏரிக்கு மலையேற்றம் அல்லது ராஜஸ்தானில் உள்ள தொலைதூர கிராமத்தில் வசிக்கும் பயனர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்க செயற்கைக்கோள் இணைப்பு சேவை உதவும்.
செல்லுலார் நெட்வொர்க் அல்லது வைஃபை இணைப்பு இல்லாதபோது, அவசர அழைப்புகளைச் செய்ய பயனர்களை இந்தச் சேவை அனுமதிக்கும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இதேபோன்ற சூழ்நிலைகளில் பயனர்கள் SoS செய்திகளை அனுப்பலாம் மற்றும் UPI பணம் செலுத்தலாம். இருப்பினும், அவசரமற்ற சூழ்நிலைகளில் கூட அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் அனுப்ப முடியுமா என்பதை BSNL நிறுவனம் உறுதிபடுத்தவில்லை.
இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க பிஎஸ்என்எல் உடன் கூட்டு சேர்ந்துள்ள வியாசாட், கடந்த மாதம் ஒரு செய்திக்குறிப்பில் , இந்த சேவையானது நிலப்பரப்பு அல்லாத நெட்வொர்க் (NTN) இணைப்புக்கான இருவழித் தொடர்பை செயல்படுத்தும் என்று குறிப்பிட்டது. IMC 2024 விழாவில் நடந்த அறிமுகத்தின் போது 36,000 கிமீ தொலைவில் உள்ள அதன் புவிநிலை L-பேண்ட் செயற்கைக்கோள்களில் ஒன்றிற்கு செய்திகளை அனுப்பவும் பெறவும் முடிந்தது.
மேலும் இந்தியாவிற்கு அடுத்த தலைமுறை இணைப்பை அறிமுகப்படுத்த, அதன் 5G ரேடியோ அணுகல் நெட்வொர்க் (RAN) மற்றும் 3.6 GHz மற்றும் 700 MHz அதிர்வெண் அலைவரிசைகளில் கோர் நெட்வொர்க்கின் சோதனைகளை பிஎஸ்என்எல் வெற்றிகரமாக முடித்தது. பிஎஸ்என்எல் பேரிடர் நிவாரண காலத்தில் அதன் திறன்களை அரசு நிறுவனங்களுக்கு அளவிடக்கூடிய, பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க்குடன் மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.
தேவைப்படும்போது கவரேஜை நீட்டிக்க ட்ரோன்கள் மற்றும் பலூன் அடிப்படையிலான அமைப்புகளை பயன்படுத்தி, அவசர காலங்களில் இந்த நெட்வொர்க் செயல்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OnePlus Nord CE 6
Starts from ₹27,999
Vivo X300 FE
Starts from ₹79,999
Vivo Y31 5G
Starts from ₹21,179
HP 303D Laser Single Function Monochrome Printer
Starts from ₹13,999
HP MFP 323DNW Laser Multi Function Monochrome Printer
Starts from ₹21,999
HP 303DW Laser Single Function Wireless Monochrome Printer
Starts from ₹15,999
iPhone Air 2 to Arrive With Chip Downgrade and Two Rear Cameras, Tipster Claims