சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் போனாக வெளிவரவிருக்கிறது கேலக்ஸி M40
கடந்த ஜனவரி மாதம் M வரிசை போன்களை இந்திய சந்தைக்குக் கொண்டு வந்தது சாம்சங்
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் போனாக வெளிவரவிருக்கிறது கேலக்ஸி M40. இந்த போனில் 5000 எம்.ஏ.எச் பேட்டரி, 128 ஜிபி சேமிப்பு வசதிகள் போன்றவை இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. அதேபோல M வரிசை போன்களில் இந்த போன்தான் முதன்முதலாக ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. M வரிசையில் சாம்சங் இதுவரை கேலக்ஸி M10, M20 மற்றும் M30 உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது.
சாம்மொபைல் என்ற தளம் வெளியிட்டு தகவல்படி, சாம்சங் கேலக்ஸி M40-யில், 128 ஜிபி சேமிப்பு வசதி, ஆண்ட்ராய்டு பைஐ மென்பொருள், 5000 எம்.ஏ.எச் பேட்டரி வசதி, ஆமோலெட் டிஸ்ப்ளே, முன்று பின்புற கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வை-ஃபை அலையன்ஸ் இணையதளத்தில் M40 குறித்து சென்ற வாரம் முதன்முதலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாம்சங் நிறுவனம், M40 குறித்து எந்த வித தகவலையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் M வரிசை போன்களை இந்திய சந்தைக்குக் கொண்டு வந்தது சாம்சங். கேலக்ஸி M10- 7,990 ரூபாய்க்கும், கேலக்ஸி M20- 10,999 ரூபாய்க்கும், கேலக்ஸி M30- 14,990 ரூபாய்க்கும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது சாம்சங். இதில் M30 மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Axis Bank Introduces Aadhaar Face Authentication: How to Update Your Axis Bank Mobile Number
Meghalaya Government Signs MoU With Starlink to Boost Connectivity in Region and Reduce Digital Divide
Samsung Galaxy A27 5G Visits Geekbench With Older Snapdragon 6 Gen 3 Chip, 6GB RAM