ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கான் மார்ச் மாத இறுதிக்குள் சீனாவில் இயல்பான உற்பத்தியை மீண்டும் தொடங்கும்.
ஃபாக்ஸ்கான் கடந்த மாதம் சீனாவில் அதன் முக்கிய ஆலைகளில் எச்சரிக்கையுடன் உற்பத்தியை மறுதொடக்கம் செய்யத் தொடங்கியது
ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கான் மார்ச் மாத இறுதிக்குள் சீனாவில் இயல்பான உற்பத்தியை மீண்டும் தொடங்கப்போவதாகவும், கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து நாட்டில் அதன் பருவகால தொழிலாளர்களின் பாதிக்கும் (half) மேற்பட்டவர்கள் வேலையை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் தோன்றிய நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவக்கூடிய காய்ச்சல் போன்ற வைரஸ், 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இது 86,000-க்கும் அதிகமான மக்களைப் பாதித்து 3,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது, இதில் பெரும்பான்மை சீனாவில் தான்.
இந்த வைரஸ், விநியோக சங்கிலிகள் மற்றும் தேவை குறைந்து வருவதைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் பயணக் கட்டுப்பாடுகளை குறைத்ததால் வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் சந்திர புத்தாண்டு இடைவெளி நீட்டிக்கப்பட்டது, அதாவது தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு வருவது மெதுவாக இருந்தது.
உலகின் நம்பர் ஒன் ஒப்பந்த உற்பத்தியாளரான தைவானின் Foxconn, சீனாவின் அதன் முக்கிய ஆலைகளில் உற்பத்தியை எச்சரிக்கையுடன் மறுதொடக்கம் செய்யத் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் இந்த ஆண்டுக்கான தொற்றுநோயானது அதன் வருவாயைக் குறைக்கும் என்றும் கூறினார்.
© Thomson Reuters 2020
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
God of War Laufey Will Get a Disc Version Before Sony Ends Disc Production in 2028