ஏப்ரல் 20 முதல் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்! - மத்திய அரசு

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 16 ஏப்ரல் 2020 17:33 IST
ஹைலைட்ஸ்
  • மொபைல்ஸ், டிவிக்கள், லேப்டாப்ஸ் ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும
  • உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியிடமிருந்து தெளிவுபடுத்தப்பட்டது
  • ஊரடங்கிற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது

21 நாட்கள் ஆரம்ப ஊரடங்கின் போது மொபைல்கள், மடிக்கணினிகள் போன்ற பொருட்கள் ஆன்லைனில் விற்க அனுமதிக்கப்படவில்லை

கொரோனா வைரஸ் காரணமாக, மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 20 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மொபைல் போன்கள், டிவிக்கள், குளிர்சாதன பெட்டிகள், மடிக்கணினிகள் போன்ற மின்னணு பொருட்கள் ஏப்ரல் 20 முதல் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மே 3 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட பிறகு, உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியிடமிருந்து இந்த விளக்கம் கிடைத்தது.

உள்துறை அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்புகள் குறிப்பாக இ-காமர்ஸ் தளங்களில் உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க அனுமதிக்கப்படுவதாகக் கூறியது. 

இப்போது, "இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தேவையான அனுமதிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் போது வணிக மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டன.

இத்தகைய இ-காமர்ஸ் தளங்களின் தளவாடங்கள் மற்றும் விநியோக பணிகளில் ஏராளமான மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, துறையைத் இயக்குவதன் மூலம், ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கும் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளருடன், அனைத்து லாரிகள் மற்றும் பிற பொருட்கள் / கேரியர் வாகனங்களை இயக்கவும் அரசு அனுமதித்துள்ளது.

மேலும், நெடுஞ்சாலைகளில் லாரி பழுதுபார்ப்பு மற்றும் தாபாக்கள் (உணவகங்கள்) கடைகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தூரத்துடன், செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Flipkart, Snapdeal, Lockdown, Home Ministry
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வி இந்தியாவில் சமூக ஊடகங்களில் அதிவேக சரிபார்ப்பிற்காக சைலண்ட் மொபைல் வெரிஃபிகேஷனை அறிமுகம் செய்கிறது
  2. சியோமி டிவி FX மினி எல்இடி சீரிஸ் இந்தியாவில் 75 அங்குலம் வரையிலான திரையுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  3. சியோமி 17T இந்தியாவில் 6,500mAh பேட்டரி மற்றும் லைக்கா கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  4. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ இந்தியாவில் 6,500mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  5. ஆண்ட்ராய்டில் போலி அழைப்புகளைக் கண்டறியும் புதிய பாதுகாப்பு வசதியை கூகுள் உலகளவில் அறிமுகம் செய்கிறது
  6. அனைத்து பயனர்களுக்கும் 'எக்ஸ்டெண்டட்' திங்கிங் மோடுடன் ஜெமினி திங்கிங் லெவல்களை வெளியிடுகிறது கூகுள்
  7. லூமியோ விஷன் 9 மற்றும் விஷன் 7 ஸ்மார்ட் டிவிகளின் புதிய 55-இன்ச் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்
  8. மோட்டோரோலா எட்ஜ் 2026 6.3-இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7450 SoC உடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  9. மெட்டா ஏஐ ஹேக்கால் கணக்குகள் பறிபோனதால் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை
  10. ஆண்ட்ராய்டில் உள்ளமைக்கப்பட்ட ஸ்கேம் கண்டறிதல் அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாகத் தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.