சீனாவின் முக்கிய இரு நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா! காரணம் என்ன?!

விளம்பரம்
Written by Gopal Sathe மேம்படுத்தப்பட்டது: 1 ஜூலை 2020 08:09 IST
ஹைலைட்ஸ்
  • US FCC Classifies Huawei and ZTE as Security Threats
  • The companies are banned as suppliers for projects subsidised by the FCC
  • 'With this decision, we are sending a clear message': FCC Chairman

சர்வதேச அளவில் இரு வேறு சித்தாந்தங்களை கொண்ட மிகப்பெரும் பொருளாதார பலம் வாய்ந்த நாடுகளான சீனா-அமெரிக்கா இடையே சமீபத்தில் பனிப்போர் நடந்துவருகிறது. முதலாளித்துவ வல்லரசு நாடான அமெரிக்கா, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்தும், அதன் அரசியல் குறித்தும் வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, அமெரிக்காவின் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்தும் யு.எஸ் கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையத்தின் (US FCC) யுனிவர்சல் சர்வீஸ் ஃபண்டின் கீழ் சீனாவை சேர்ந்த இரு நிறுவனங்களும் சப்ளையர்களாக இருக்க தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நெட்வொர்க்குகளை பாதுகாப்பு அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்கான இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எஃப்.சி.சி யின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஹாவய் மற்றும் இசட்.டி.இ இந்த இரண்டு சீன நிறுவனங்களும் சப்ளையர்களாக இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலமாக மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்களிடத்திலிருந்தும் தயாரிக்கப்பட்ட அல்லது அவர்களால் வழங்கப்பட்ட எந்தவொரு உபகரணங்களையும் பெறுவதில்லை என்கிற முடிவினை எஃப்.சி.சி எடுத்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ. 62,676 கோடி வருவாய் இழப்பினை இந்நிறுவனங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது.

“அமெரிக்காவின் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் நமது 5 ஜி சேவைகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இந்த இரு நிறுவனங்கள் மூலமாக இருக்கின்றது.“ என எஃப்.சி.சி தலைவர் அஜித் பாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், "இரு நிறுவனங்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனாவின் இராணுவ எந்திரங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன, மேலும் இரு நிறுவனங்களும் சீனாவின் உளவுத்துறையுடன் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் சீன சட்டத்திற்கு உட்பட்டுள்ளன." என்றும், “உளவுத்துறை, மற்றும் பிற நாடுகளில் உள்ள தகவல் தொடர்பு சேவை வழங்குநர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் நடவடிக்கைகளையும் பணியகம் கணக்கில் எடுத்துக்கொண்டது. நெட்வொர்க் தகவல்களை சுரண்டுவதற்கும், எங்கள் முக்கியமான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை சமரசம் செய்வதற்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை நாங்கள் அனுமதிக்க முடியாது, அனுமதிக்க மாட்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டோக் உட்பட சீனாவிலிருந்து 59 பயன்பாடுகளை தடை செய்ய இந்திய அரசு உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: FCC, Ajit Pai, Huawei, ZTE
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.