வாட்ஸாப் பேமென்ட்ஸுக்கு தடை கோரி மனு - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 27 ஆகஸ்ட் 2018 18:27 IST

வாட்ஸாப் நிறுவனம் தொடங்கியுள்ள பேமெண்ட் சேவையை நிறுத்த உத்தரவிடுமாறு, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகளை முழுமையாக பின்பற்றாத வரை அனுமதிக்கக் கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கும், வாட்ஸாப் நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

அக்கவுண்டபிளிட்டி மற்றும் சிஸ்டமிக் சேஞ் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், வாட்ஸாப் பேமென்ட் சர்வீஸ் கே.ஒய்.சி மற்றும் புகார்களை தீர்த்து வைக்கும் அதிகாரி, ஆகியோர் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் புகார்களை தீர்க்க அதிகாரி ஒருவரை இந்திய சேவைகளுக்கு நியமித்துள்ளன. ஆனால், வாட்ஸாப் அதனை செய்யவில்லை என்று கூறியுள்ளது.

வாட்ஸாப் ஒரு வெளிநாட்டு நிறுவனம். இந்தியாவில் பேமென்ட் சேவை தொடங்க வேண்டும் என்றால், இந்தியாவில் அலுவலகம் இருக்க வேண்டியது அவசியம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸாப்பை 200 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள், பேமென்ட் சேவையை சோதித்து வருகின்றனர்.

இவ்வளவு பெரிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கொண்ட் வாட்ஸாப் நிறுவனத்தை புகாருக்காக தொடர்பு கொள்ள ஒரு சேவை எண் கூட இல்லை என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Supreme Court, WhatsApp
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்த ஆண்டின் இறுதியில் கேலக்ஸி S26 சீரிஸில் ஏர் டிராப் (AirDrop) வசதியை அறிமுகம் செய்ய சாம்சங் திட்டம்
  2. விவோ Y21 5G மற்றும் விவோ Y11 5G: சர்வதேச அறிமுகத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய விலை மற்றும் நிறங்கள் குறித்த தகவல்
  3. அலெக்சா மற்றும் AI அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அமேசான் உருவாக்கி வருகிறது
  4. Mad For Each Other இப்போது ஆன்லைனில் ஸ்ட்ரீமிங் ஆகிறது: தளம், நடிகர்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள்
  5. கேலக்ஸி S26 சீரிஸ் அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ராவின் விலை குறைந்துள்ளது
  6. ரியல்மி 16 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  7. போட் வேலர் வாட்ச் 1R இந்தியாவில் அறிமுகம்: 1.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 10 நாட்கள் வரை பேட்டரி லைஃப்!
  8. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 'மெட்டா AI சப்போர்ட் அசிஸ்டண்ட்' அறிமுகம்: கணக்கு மற்றும் கண்டன்ட் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு!
  9. ஷியோமி வாட்ச் S5 அறிமுகம்: 1.48-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 21 நாட்கள் வரை பேட்டரி லைஃப்!
  10. ஷியோமி புக் ப்ரோ 14 அறிமுகம்: இன்டெல் கோர் அல்ட்ரா X7 358H ப்ராசஸர் மற்றும் 72Wh பேட்டரி வசதிகளுடன்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.