விவோ வி19-ன் அறிமுகத்தையும் விவோ மாற்றியமைத்துள்ளது
சீன கைபேசி தயாரிப்பாளர் விவோ, செவ்வாயன்று அத்தியாவசிய பொருட்களின் தேவையை அறிந்துகொள்ள, அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியாவில் N95 முகமூடிகளை நன்கொடையாக வழங்குவதாகவும் தெரிவித்தது.
"அத்தியாவசிய பொருட்களின் தேவையை அறிய நாங்கள் அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம், அடுத்த சில வாரங்களில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.
"முதல் கட்டமாக, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் N95 முகமூடிகளை வாங்குவதற்கும் நன்கொடை அளிப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்" என்று Vivo இந்தியாவின் பிராண்ட் வியூகத்தின் இயக்குநர் நிபூன் மரியா (Nipun Marya) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, நிறுவனம் தனது வரவிருக்கும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் - Vivo V19 - இரட்டை கேமரா பஞ்ச்-ஹோல் மற்றும் குவாட்-கேமரா அமைப்புடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
"இந்த கடினமான காலங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக குடிமக்களின் நல்வாழ்வு எங்கள் முதன்மையாகும். எனவே, இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், வி19-ல் இருந்து தொடங்கி எங்கள் புதிய தயாரிப்பு வெளியீடுகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். கோவிட்-19 நிவாரண முயற்சிகளுக்கு எங்கள் நேரம் மற்றும் தகவல்களுக்கு கவனம் செலுத்துகிறோம்", என்று மரியா தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவில் லட்சக்கணக்கான N95 முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை நன்கொடையாக வழங்குவதாக ஷாவ்மி அறிவித்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.